close
Choose your channels

திருமணத்தில் கலந்து கொள்ள இவர்களுக்கு மட்டும் தான் அனுமதி: கெளதம் கார்த்திக்

Thursday, November 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் வரும் 28ஆம் தேதி சென்னை அருகே உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற இருப்பதாகவும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் அதே நேரத்தில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா திருமண வரவேற்பு சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் திருமண வரவேற்பில் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டுள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

’தேவராட்டம்’ என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா ஆகிய இருவருக்கும் நட்பு ஏற்பட்டது என்றும் இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து இருதரப்பு பெற்றோர்களும் இந்த காதலை அங்கீகரித்ததன் மூலம் தற்போது இருவரும் திருமண பந்தம் மூலமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கௌதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் விரைவில் தம்பதிகளாகவுள்ள உள்ள நிலையில் அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.