அக்னி நட்சத்திரம் ரீமேக் குறித்து மனம் திறந்த கெளதம் கார்த்திக்

  • IndiaGlitz, [Tuesday,June 13 2017]

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு நடித்த வெற்றிப்படம் 'அக்னி நட்சத்திரம்'. இந்த படத்தின் ரீமேக்கில் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக், பிரபு மகன் விக்ரம்பிரபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க மாட்டேன் என கெளதம் கார்த்திக் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கெளதம் கார்த்திக் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது: மிகவும் பாஸிடிவான ஒரு தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. நடிகர்கள் கேமராவின் முன் நடிப்பது மட்டும் நடிப்பல்ல , இன்னும் நிறைய உள்ளது. நான் சிப்பாய் , இவன் தந்திரன் , ஹரஹர மகா தேவகி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளேன். இப்போது “ நல்ல நாள் பார்த்து சொல்றேன் “ என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து வருகிறேன்.

அப்பா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற “ அக்னி நட்சத்திரம் “ ஒரு தரம்வாய்ந்த படைப்பாகும். நிச்சயம் அப்படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க மாட்டேன்.

எனக்கு நடிப்பின் மேல் மிகப்பெரிய ஆசையை தூண்டிய திரைப்படம் கடல். ரங்கூன் என்னுடைய முதல் வெற்றி படமாகும். நல்ல கதையும் , நல்ல இயக்குனரும் அமையும் பட்சத்தில் என்னுடைய கேரியர் இன்னும் சிறப்பாக அமையும். எப்போதெல்லாம் நான் சோர்வாக உள்ளேனோ அப்போதெல்லாம் எனக்கு சக்தி கொடுப்பவர் என்னுடைய அம்மா தான். அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

கண்டிப்பாக எனக்கு காதல் திருமணம் தான். 35 முதல் 40 வயதில் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். தற்போது அப்பா , மற்றும் தாத்தா நடித்த படங்களை பார்த்து வருகிறேன். என்னை பொறத்தவரை அப்பா மிகப்பெரிய லெஜன்ட். அவர் நடித்ததில் எனக்கு கோகுலத்தில் ஒரு சீதை திரைப்படத்தில் வரும் “ கிரெடிட் கார்ட் “ கொடுக்கும் காட்சி மிகவும் பிடிக்கும். சினிமாவில் அப்பாவுக்கு மிகச்சிறந்த ஜோடி என்றால் நக்மா மேடம் மற்றும் ரேவதி மேடம் என்று சொல்லுவேன்.

சினிமாவில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்றால் அது ஆர்.ஜே. பாலாஜி , இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி , ரங்கூன் படத்தில் நடித்த டேனியல் ஆகியோர். நான் ஸ்க்ரிப்டை பற்றி இயக்குநர் ராஜ் குமார் பெரியசாமி , ஆர்.ஜே.பாலாஜி ஆகியோருடன் கலந்து பேசுவேன்.அப்பா நான் நடித்த கடல் மற்றும் வை ராஜா வை ஆகிய படங்களை பார்த்துள்ளார். இப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் அப்பாவை பற்றி சொல்லும் போது தான் அவரை பற்றி எனக்கு தெரியவருகிறது. அப்பா என்னை தம்பி என்று தான் கூப்பிடுவார்.வருங்காலத்தில் நான் நடிக்கும் படங்களில் இன்னும் நிறைய கவனம் செலுத்துகிறேன்

இவ்வாறு நடிகர் கௌதம் கார்த்திக் கூறினார்.

More News

ஹிப்ஹாப் தமிழாவுக்கு இன்னும் 17 நாள் தான் அவகாசம் இருக்கு!

விஷால் நடித்த 'ஆம்பள' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ளார்.

மூன்று புதிய மாடல்களுடன் மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் மொபைல்போன் அறிமுகமானபோது அனைவருக்கும் தெரிந்த ஒரே மாடல் நோக்கியா தான். ஆனால் காலப்ப்போக்கில் மொபைல்போன் தயாரிப்பு நிறுவனங்களின் போட்டி காரணமாகவும், ஆண்ட்ராய்ட் போனின் வருகை காரணமாகவும் நோக்கியா கடந்த சில ஆண்டுகளாக மொபைல் போன் சந்தையில் இருந்து ஒதுங்கி இருந்தது.

கமல் எனக்கு தந்தை மட்டுமல்ல! ஸ்ருதிஹாசன் பெருமிதம்

பிரபல நடிகையும் கமலின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன் நடித்த பாலிவுட் படமான ‘பெஹன் ஹோகி தேரி' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

சூர்யா உள்பட 8 நடிகர்கள் மீதான வழக்கில் புதிய உத்தரவு

கடந்த 2009ஆம் ஆண்டு முன்னணி தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியான செய்தி காரணமாக நடிகர் சங்கம் சார்பில் கண்டனக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அமலாபால் லைஃபில் இன்னொரு காதல்-கல்யாணம் உண்டா? அவரே அளித்த பதில்

இயக்குனர் விஜய்யுடன் காதல், கல்யாணம் பின்னர் அதே வேகத்தில் விவாகரத்து என கண் இமைக்கும் நேரத்தில் அமலாபால் வாழ்க்கையில் என்னென்னமோ நடந்துவிட்டது