பிரபல நடிகரின் படத்தில் வில்லன் ஆனார் கவுதம் மேனன்!

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் ’கோலிசோடா 2’ உட்பட ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான துல்கர் சல்மானின் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடம் ஒன்றில் நடித்தார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது என்பதும் அவரது நடிப்பும் பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் படங்களை இயக்குவது மட்டுமன்றி அதிக படங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜிவி பிரகாஷ் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ’செல்பி’. இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி என்பவர் இயக்கி வருகிறார். எஞ்சினியரிங் கல்லூரியில் நடைபெறும் மோசடிகளை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும் என்றும், இந்த படத்தில் கவுதம் மேனன் ஒரு கல்லூரி நிர்வாகியாக நடித்து வருகிறார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொம்மலு நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மார்ச் மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. ஜிவி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் கவுதம் மேனன் வில்லனாக இணைந்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகன், மருமகளுடன் திடீரென ரஜினியை சந்தித்த திருநாவுக்கரசு: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்கிய அரசியல் களத்தில் இறங்கவுள்ள நிலையில் அவருடைய கட்சியில் தற்போது பிரபலமாக உள்ள கட்சிகளிலிருந்து பலர் இணைவார்கள்

தற்கொலை செய்யுமளவுக்கு என் அப்பா கோழை இல்லை..! அம்ருதா.

நான் ப்ரணையை திருமணம் செய்தால் சொத்தையெல்லாம் தன் பேருக்கு எழுதிக் கொடுக்குமாறு எனது சித்தப்பா ஷ்ரவன் குமார் சொல்லியுள்ளார். இது விஷயமாக ஏற்கனவே எனது அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் தகராறு ஏற்பட்டது.

மோடி அரசின் அடுத்த அட்டாக்.. A-யில் தொடங்கும் வங்கியா..?! சுப்பிரமணியன் சுவாமி.

வங்கிகளை RBI உடன் இணைப்பது எந்த பயனையும் தராது எனவும்.. இந்த மோசமான போருளாதர நிலையால் அடுத்தடுத்து திவாலாக 10 வங்கிகள் வரிசையில் நிற்கின்றன.

கொரோனா அச்சம்: வாரணாசி கோவிலில் சிலைகளுக்கு அணிவிக்கப் பட்ட முகக்கவசம்!!!

கொரோனா பற்றிய அச்சம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை. தற்போது, புகழ்பெற்ற வாரணாசி சிவன் தலத்தில் உள்ள அனைத்து சிலைகளுக்கும் அர்ச்சகர் ஒருவர் முகக் கவசத்தை அணிவித்து உள்ளார்.

பாடாய் படுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில் பறவைக் காய்ச்சலா??? 

இந்தியாவில் கொரோனா தொற்று 42 ஆக அதிகரித்து இருக்கிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை