கொரோனா வைரஸ் போரில் களமிறங்கும் கவுதம் மேனன்!

கொரோனா வைரஸ்க்கு எதிராக இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் கொரோனா வைரசால் பலியாகியும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு குறும்படங்கள் தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் வெளியாகி வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் கவுதம் மேனன், கொரோனா வைரஸ் குறித்த டாக்குமெண்டரி படம் ஒன்றை டிஸ்கவரி சேனலுக்காக உருவாக்கி உள்ளார்

COVID-19: India’s War Against The Virus என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த குறும்படம் ஜூலை மாதம் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளதை போல், ஹிந்தியில் மனோஜ் பாஜ்பாய் அவர்கள் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு, ஊரடங்கால் ஏற்பட்ட பிரச்சனைகள் மற்றும் நன்மைகள் உள்ளிட்ட பல சம்பவங்கள் இந்த குறும்படத்தில் இடம் பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி

ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது

50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில்

பீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது

பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.