என்னிடம் ஆதாரம் இருக்கின்றது: சம்பள பாக்கி குறித்து கவுதமி

  • IndiaGlitz, [Tuesday,February 27 2018]

நடிகர் கமல்ஹாசன் தனக்கு 'தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்ததற்கு சம்பளம் தரவில்லை என சமீபத்தில் நடிகை கவுதமி புகார் கூறியிருந்தார். இந்த புகாருக்கு நேற்று பதிலளித்த ராஜ்கமல் நிறுவனம், ''தசாவதாரம்' மற்றும் விஸ்வரூபம்' ஆகிய இரண்டு படங்களின் தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அல்ல என்றும், கவுதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் அதை அந்த படங்களின் தயாரிப்பு நிறுவனங்களிடம் கேட்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.

மேலும் ராஜ்கமல் நிறுவனத்தில் ஆடை வடிவமைப்பாளராக கவுதமி பணிபுரிந்ததில் சம்பள பாக்கி இருப்பதாக ஆதாரத்தை காட்டினால் அந்த பணத்தை வழங்க தயார் என்றும் ராஜ்கமல் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இதுகுறித்து இன்று கருத்து கூறியுள்ள கவுதமி, 'என்னிடம் ஆதாரம் உள்ளது. ஆதாரம் இல்லமால் எந்த காரணமும் இல்லாமல் நான் எதுவும் பேச மாட்டேன்' என்றும் கவுதமி கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.