கமல்ஹாசனுடன் பிரிவு ஏன்? மனம் திறந்த கவுதமி

  • IndiaGlitz, [Saturday,March 17 2018]

கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த நடிகை கவுதமி திடீரென கடந்த ஆண்டு பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு குறித்து பலரும் பலவிதமான கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிய நிலையில் இதுகுறித்து கவுதமி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:

கமலுடன் ஏற்பட்ட பிரிவு குறித்து ஏற்கனவே நான் விரிவான விளக்கத்தை என்னுடைய பிளாக்கில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். இந்த முடிவை நான் ஒரே நாள் இரவில் எடுக்கவில்லை. இரண்டு வருடங்கள் யோசித்து அதன் பின்னர்தான் எடுத்தேன். நாங்கள் பிரிந்ததற்கான காரணங்கள் பல இருந்தாலும் அந்த எல்லா காரணத்தையும் என்னால் வெளியே சொல்ல முடியாது. அது எங்கள் இருவருக்குமான தனிப்பட்ட விஷயம்.

இந்த உலகில் விவாதம் செய்ய எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன. நம்முடைய சக்தியை வெளிப்படுத்தி சாதிக்க வேண்டிய விஷயங்கள் எத்தனையோ உள்ளன, ஆனால் அவற்றில் கவனம் செலுத்தாமல் நானே பெரிதுபடுத்தாத ஒருசிறிய விஷயம் குறித்து ஏன் இவ்வளவு நாள் பொதுமக்கள் விவாதம் செய்கின்றனர் என்று எனக்கு புரியவில்லை' என்று கவுதமி தெரிவித்தார்

கமல் பிரிவு குறித்து கவுதமி தன்னுடைய பிளாகில், 'நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தோம். என் வாழ்வில் நான் எடுத்த பேரழிவு முடிவு இதுவே. மனம் ஒத்து வாழ்ந்த இருவர் அவர்கள் பாதை வெவ்வேறாக பிரிந்துவிட்டது என்பதை உணர்வது அவ்வளவு எளிதல்ல. நாங்கள் அதை புரிந்து கொண்டோம். எங்கள் பாதை இனி ஒன்று சேர்வதற்கில்லை என்பது விளங்கிற்று. இப்படி ஒரு புரிதல் ஏற்பட்ட பின்னர் எங்கள் முன்னால் இரண்டு வாய்ப்புகளே இருந்தன. ஒன்று எங்கள் தனிப்பட்ட கனவுகளை சமரசம் செய்து கொள்வது. மற்றொன்று, பரஸ்பரம் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பிரிந்து முன்னேறுவது. இவற்றில் பிரிந்து செல்வது என்ற முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. இரண்டு வருடங்களுக்கு மேல் யோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன்' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முடிவுக்கு வந்தது 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

'ராஜதந்திரம்' புகழ் வீரா மற்றும் 'குக்கூ' புகழ் மாளவிகா நாயர் மற்றும் பசுபதி, ரோபோ ஷங்கர், 'மொட்ட' ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்த படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'.

எனது சினிமா வாழ்க்கையின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று: தமன்னா

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த கண்ணே கலைமானே' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கி சமீபத்தில் முடிவடைந்தது.

மீண்டும் ரிஸ்க்கான கேரக்டரில் நயன்தாரா?

பிரபலமான நடிகைகள் மாற்றுத்திறனாளி என்ற ரிஸ்க்கான வேடத்தில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். குறிப்பாக காது கேட்காத, வாய் பேசமுடியாத கேரக்டர்களில் நடிப்பது அபூர்வம்.

மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் கத்துக்குட்டி

நிலா சாட்சி கிரியேஷன்ஸ் அன்வர் கபீர், ஓன் புரொடக்சன்ஸ் ராம்குமார், முருகன் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'கத்துக்குட்டி'. இந்த படம் சமீபத்தில் ரீலிஸாகி பலரின் பாராட்டையும் ஆதரவையும் பெற்றது

ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு இன்ஸ்பெக்டர் கொடுத்த வித்தியாசமான ட்ரீட்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வலம் வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி, இனிமேல் ஹெல்மெட் போட்டு தான் வண்டி ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அசத்தியுள்ளார்