close
Choose your channels

எதிர்க்கட்சியாக இருந்தபோது ரூ.1 கோடி, முதல்வரான பின் ரூ.25 லட்சமா? ஸ்டாலினுக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

Thursday, May 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி தரவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூதாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்றிய ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் 25 லட்சம் மட்டுமே அறிவித்துள்ள

கடந்த ஏப்ரல் மாதம் திமுக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியபோது அந்தக் கூட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் செய்தியாளர்களின் கூறியுள்ளார்

இந்த நிலையில் தற்போது அவரே முதல்வர் ஆகியுள்ள நிலையில் கொரோனாவால் உயிரிழக்கும் முன்கள பணியாளர்களுக்கு ரூபாய் 25 லட்சம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து அதிமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் ஏற்கனவே முதல்வரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சில நாட்களுக்கு முன்பு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது முன் பணியாளர்கள் உயிர் இழந்தால் 1 கோடியை நிவாரணம் ஸ்டாலின் கோரினார். மோடி ஜீ மற்றும் EPS 50 லட்சம் கொடுத்தார்கள்.. அதை ஸ்டாலின் இப்பொழுது 25 லட்சமாக குறைத்து விட்டார். அன்று கேட்டது ஒன்று இன்று செய்வது ஒன்று’ என பதிவு செய்துள்ளார்.

வழக்கம்போல் காயத்ரியின் இந்த டுவிட்டுக்கு நெட்டிசன்கள் எதிர்மறை கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். எடப்பாடி ஆட்சியில் ரூ.50 லட்சம் யாருக்கும் கொடுக்கவில்லை என்றும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரூ.15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி கூறியது என்ன ஆச்சு என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.