டெல்லி வன்முறை: பா.ரஞ்சித்துக்கு காயத்ரி ரகுராம் கேள்வி!

டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது சமூக வலைத்தளத்தில், ‘குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியவுடன் அரசு வன்முறையை கையிலெடுத்தது. தலைநகரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது, ஆளும் அரசு வன்முறையை ஊக்குவிக்கிறது. இதே நிலை தமிழகத்திற்கும் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது’ என்று பதிவு செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், ‘மதச்சார்பின்மை என்றால் என்ன? அது இந்துக்களுக்கும் மட்டும் தான் இருக்க வேண்டுமா? பாஜக சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. உங்களை போன்ற பெரியாரின் கைக்கூலிகள் தான் தமிழகத்தில் இந்து மதத்தை அழித்து கொண்டிருக்கின்றீர்கள். அதேபோல் பாகிஸ்தான் கைக்கூலியான காங்கிரஸ் இந்தியாவை அழித்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி வன்முறை குறித்த பா.ரஞ்சித்தின் டுவிட்டும் அதற்கு பதில் அளித்துள்ள காயத்ரி ரகுராம் டுவிட்டும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ரஜினியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஆவணப்படமான 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஆவண[படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது

ஈரானிய ரீமேக் படத்திற்கு இசையமைக்கும் இசைஞானி

'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சாமி இயக்கியுள்ள அடுத்த படம் 'அக்கா குருவி. இந்த படம் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி

சமந்தாவின் குரலாக நான் இருப்பது எனக்கு பெருமை: பிரபல பாடகி

சிம்பு த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கிய 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 10 வருடங்கள் ஆனதை அடுத்து சிம்பு மற்றும் த்ரிசாவின் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்

'சபாஷ் ரஜினி'! கமல் வாழ்த்து டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பாஜகவையும் மத்திய அரசையும் கடுமையாக தாக்கினார் என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

டெல்லி வன்முறை உளவுத்துறையின் தோல்வி: ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டெல்லி வன்முறை குறித்து முதல்முறையாக தனது பேட்டியில் கூறியுள்ளார்