இந்தி மொழியை கற்றுக்கொள்ளுங்கள்: வலியுறுத்தும் தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Monday,September 16 2019]

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘ஒரே நாடு ஒரே மொழி’ என இந்தியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்ற ஒரு கருத்தை கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பெரிய அளவில் மற்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பவில்லை. வழக்கம்போல் தமிழை வைத்து அரசியல் செய்யும் தமிழக அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தை கையில் எடுத்து அமித்ஷாவுக்கும் மத்திய அரசுக்கும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் நடிகையும், நடன இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளருமான காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘இந்தி மொழி என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கான மொழி அல்ல. பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டும் பேசப்பட்டும் வரும் மொழி ஆகும். இந்தி நம்மை ஒற்றுமைப்படுத்துகிறது. இந்த தலைமுறையினர் இந்தி மொழி ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுவதாக வரவேற்கின்றனர். நமக்கு தேசிய கொடி உள்ளது, தேசிய பறவை உள்ளது, தேசிய விலங்கு, பழம் உள்ளது. எனவே ஏன் ஒரு தேசிய மொழி இருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த டுவீட்டுக்கு வழக்கம்போல் சில ஆதரவும், பல எதிர்ப்பும் கொண்ட விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தி மொழியை படிக்கலாமா? வேண்டாமா? என்பதை மக்களிடமே விட்டுவிடலாம், இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் அரசியல் செய்வது தேவையற்றது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

More News

வனிதாவை அடுத்து வெளியேறும் இருவர் யார்?

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வனிதா வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஏழு பேர் மட்டுமே உள்ளனர். இதில் இன்னும் இருவர் வெளியேற்றப்பட்டவுடன் ஐவர் இறுதி போட்டிக்கு செல்வர்

வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம்: சுபஸ்ரீ விபத்து குறித்து கமல்!

சென்னையை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் கலாச்சாரத்திற்கு பரிதாபமாக பலியான பின்னரே பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அரசியல்வாதிகளும், திரையுலகினர்களும் கூறி வருகின்றனர்.

இறுதி போட்டிக்கு நேரடியாக செல்லும் டாஸ்க்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் வீட்டில் நேற்று வனிதா வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது சேரன், கவின், சாண்டி, தர்ஷன், ஷெரின், முகின், லாஸ்லியா ஆகிய 7 பேர் மட்டுமே உள்ளனர்.

தர்ஷ் மச்சான்.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்: பிக்பாஸ் நடிகை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வெல்வார் என்று எதிர்பார்க்கப்படும் ஒருவர் தர்ஷன். கடும் போட்டியாளராக ஆரம்பத்தில் இருப்பவர் இவர்தான். எத்தனை முறை எவிக்சன் பட்டியலி

அடுத்தடுத்து வெளியேறுவது யார்? கமல் கேள்வியால் போட்டியாளர்கள் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று எவிக்சன் படலம் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எவிக்சன் பட்டியலில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்