close
Choose your channels

எனது இதயமே நொறுங்கி விட்டது: காயத்ரி ரகுராமன் இரங்கல் அறிவிப்பு 

Thursday, September 17, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாஜக பிரமுகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும், நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு நெருக்கமான ஒருவரின் மறைவை கேட்டு இதயமே நொறுங்கி விட்டது என கூறியுள்ளார்

காயத்ரி ரகுராமுக்கு பல ஆண்டுகளாக மேக்கப் மேனாக இருந்தவர் சம்பத். இவர் உடல் நலக் குறைவு காரணமாக திடீரென மரணம் அடைந்தார். இதுகுறித்து காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் கூறியதாவது: ’எனது மேக்கப்மேன் சம்பத் அண்ணா அவர்கள் திடீரென மரணம் அடைந்து விட்டார். இந்த செய்தியை கேட்டு எனது இதயமே நொறுங்கி விட்டது. நான் உங்களை மிகவும் மிஸ் செய்கிறேன் அண்ணா’.

சம்பத் அண்ணா எனக்கு பல வருடங்களாக மேக்கப்மேனாக இருந்தார். மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.