காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த இரண்டு நாட்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிராக காரசாரமாக டுவீட்டுக்களை பதிவு செய்தார். ஒருசில டுவிட்டுக்களில் நேரடி சவாலும் விடுத்திருந்தார். மேலும் முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை திருமாவளவன் சந்தித்தது குறித்த வீடியோவை பதிவு செய்து அதிலும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் விடுதலைச்சிறுத்தைகள் ஐடி விங் அளித்த புகாரின் அடிப்படையில் காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. காயத்ரி ரகுராம் சுமார் 3.64 ஃபாலோயர்ஸ்கள் வைத்திருந்த நிலையில் தற்போது அவருடைய டுவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டது அவருக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்போது நட்சத்திர அஸ்தஸ்தில் உள்ளவர்கள் நாகரீகமாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதும் இல்லையேல் காயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட இழப்புதான் அனைவருக்கும் ஏற்படும் என்பதும் தெரிய வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.