close
Choose your channels

செல்வராகவன் வீட்டிலும் புகுந்த ஒமிக்ரான் வைரஸ்: தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை!

Friday, January 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து முழு நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த மூன்றாவது அலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவியும் ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தின் இயக்குனருமான கீதாஞ்சலி செல்வராகவன் அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

இதனை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். தனக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லேசான அறிகுறியே இருப்பதால் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் லேசான தலைவலி, தொண்டை வலி மற்றும் முதுகு வலியும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.