close
Choose your channels

பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

Wednesday, April 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

German lady rape and murder in Thailand

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பாறையின் இடுக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, மிரம் பீல்ட் என்கிற 26 வயது பெண் தாய்லாந்து நாட்டை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணியாக வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் கோ சி சிங் தீவுவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை உள்ளூர்வாசி ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து... அவருடைய முகத்தை, அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பினார்.

German lady rape and murder in Thailandபாறையில் இடுக்கில், ரத்த கரையுடம் ஒரு பெண் சடலம் கிடப்பதாக, உள்ளூர் வாசிகள், மற்றும் சுற்றுலா பயணிகள் கொடுத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்... மிரம் பீல்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவத்தை அரங்கிற்றியது உள்ளூர் வாசியான 'ரொனால்நன் ரோமுறுன்' என்கிற, 24 வயது இளைஞர் என தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த வெளிநாட்டு பெண்ணை தான் பின்தொடர்ந்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டதாகவும், அவர் தன்னை அடையாளம் கண்டு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் அவர் தலையில் கல்லை போட்டு கொன்று, கொலை செய்து முகத்தை சிதைத்து பாறையின் இடுக்கில் போட்டதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.