பாறை இடுக்கில் கிடந்த வெளிநாட்டு பெண்ணின் சடலம்! நடந்தது என்ன? பதற வைக்கும் சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,April 17 2019]

வெளிநாட்டை சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்த இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பாறையின் இடுக்கில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, மிரம் பீல்ட் என்கிற 26 வயது பெண் தாய்லாந்து நாட்டை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணியாக வந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் கோ சி சிங் தீவுவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரை உள்ளூர்வாசி ஒருவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து... அவருடைய முகத்தை, அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைத்து விட்டு அங்கிருந்து தப்பினார்.

பாறையில் இடுக்கில், ரத்த கரையுடம் ஒரு பெண் சடலம் கிடப்பதாக, உள்ளூர் வாசிகள், மற்றும் சுற்றுலா பயணிகள் கொடுத்த தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்... மிரம் பீல்ட் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த சம்பவத்தை அரங்கிற்றியது உள்ளூர் வாசியான 'ரொனால்நன் ரோமுறுன்' என்கிற, 24 வயது இளைஞர் என தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது உண்மையை அவர் ஒப்புக்கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த வெளிநாட்டு பெண்ணை தான் பின்தொடர்ந்து வந்து பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டதாகவும், அவர் தன்னை அடையாளம் கண்டு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் அவர் தலையில் கல்லை போட்டு கொன்று, கொலை செய்து முகத்தை சிதைத்து பாறையின் இடுக்கில் போட்டதாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து குற்றவாளியை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

எதையும் சந்திக்க தயார்! ஐடி ரெய்டுக்கு பின் கனிமொழி பேட்டி!

தூத்துகுடி திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் நேற்று திடீரென வருமான வரித்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும்

டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது

சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தது.