close
Choose your channels

பெட்ரோல் பங்கில் தீ- தனி ஆளாய் தீயை அணைக்கும் சிங்கப் பெண் வைரல் வீடியோ

Wednesday, February 26, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பெட்ரோல் பங்கில் ஒரு இருசக்கர வாகனம் தீடீரெனத் தீப்பிடித்து எரிகிறது. வண்டியின் உரிமையாளர் முதற்கொண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் தப்பி ஓடுகின்றனர். ஆனால் ஒரு பெண் அந்தத் தீயை துச்சமாக நினைத்து துரித வேகத்தில் அணைக்கிறார். இந்த வீடியோ காட்சி தான் இப்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி இருக்கிறது.

பெட்ரோல் போட வந்த நபர் முதலில் கம்பீரமாக தான் வண்டியில் நின்று கொண்டிருக்கிறார். தீடீரென வண்டியின் டேங்க் தீப் பிடிக்கிறது. பதறிப்போய் வண்டியை விட்டு இறங்கி ஓடுகிறார். பக்கத்தில் இருக்கும் நபரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தலைத் தெறிக்க ஓடுகிறார். ஆனால் அந்த பெட்ரோல் பங்கில் வேலைப் பார்க்கும் ஒரு பெண் அலட்டிக் கொள்ளாமல் பக்கத்தில் இருக்கும் தீயணைப்புக் கருவியைக் கொண்டு அடுத்த வினாடியே தீயை அணைக்கிறார்.

இந்த வீடியோ காட்சி ”சிங்கப் பெண்ணே” என்ற பாராட்டு தலைப்புடன் தற்போது அதிகமாக டிவிட்டர் பக்கத்தில் பகிரப் பட்டு வருகிறது.

.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.