காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை மளிகை கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியில் மளிகை கடையில் வேலை பார்க்கும் பாக்யராஜ் என்பவரும் காதலித்துதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாக்கியராஜை அந்த பெண் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அந்த பகுதியில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் ஒன்றில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை வெளியே அழைத்து வந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சுதாரித்து கையால் தடுத்ததால் படுகாயத்துடன் உயிர்தப்பினார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பாக்யராஜை சுற்றி வளைக்க அவர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.

தற்போது கத்திக்குத்தால் காயம் அடைந்த இளம்பெண் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பாக்யராஜை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

இறந்துபோன ஒருவரின் இதயத்தை வேறு உடலில் செயல்பட வைத்த மருத்துவர்கள்..!

உடல் தானம் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்திருக்கும் நிலையில், உடல் தானம் மூலம் கிடைக்கும் உடல் பாகங்களை வைத்து அந்த உறுப்புகளை மற்றொருவருக்கு

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த 12-ம் வகுப்பு மாணவி..! ட்ரென்டிங் வீடியோ

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்.பி-ய

2 நிமிடம் போதும்.பாம்புக் கடியை அடையாளம் காண புதிய கருவி, கேரளாவில் கண்டுபிடிப்பு..!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி பகுதியில் ஐந்தாம் வகுப்பு படித்துவந்த மாணவி ஷஹலா ஷெரின் பாம்பு கடித்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்

வரும் வெள்ளியன்று 5 படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் 'கேப்மாரி'

என் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..!

மத்தியப் பிரதேசத்தில் மனைவியைக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கியுள்ளார்