close
Choose your channels

காதலிக்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய மளிகைக்கடை ஊழியர்

Thursday, December 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை மளிகை கடை ஊழியர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை குரோம்பேட்டை கணபதிபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியில் மளிகை கடையில் வேலை பார்க்கும் பாக்யராஜ் என்பவரும் காதலித்துதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பாக்கியராஜை அந்த பெண் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாக்கியராஜ் அந்த பகுதியில் தனியார் கம்ப்யூட்டர் சென்டரில் ஒன்றில் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை வெளியே அழைத்து வந்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும் அந்த பெண் சுதாரித்து கையால் தடுத்ததால் படுகாயத்துடன் உயிர்தப்பினார். அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பாக்யராஜை சுற்றி வளைக்க அவர் தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது.

தற்போது கத்திக்குத்தால் காயம் அடைந்த இளம்பெண் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்து கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய பாக்யராஜை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடத்தில் இளம் பெண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குரோம்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.