அங்க போயுமா??? உயர்சாதி இந்துக்கள் சாதிப்பாகுபாடு காட்டடுவதாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!

  • IndiaGlitz, [Thursday,July 02 2020]

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சிஸ்கோ சிண்டம்ஸ் இன்க் (CSO.Co) நிறுவனத்தில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு வேலைப்பார்க்கும் உயர் சாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த பணியாளர்கள் மீது தொடர்ந்து பாகுபாடு காட்டி வருவதாகக் குற்ற வழக்கு ஒன்று பதிவாகி இருக்கிறது. சிஸ்கோ நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா சென்ற பிறகும் வகுப்பு பேதம் காட்டப்படுவது தொடருகிறது எனக் குற்றச் சாட்டு எழுந்துள்ளது. வேலைப் பார்க்கும் இடங்களில் இந்தப் பாகுபாடு மேலும் சிக்கலை உண்டாக்குகிறது என்றும் வழக்குப் பதிவில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.

அமெரிக்க சட்ட அமைப்பில் சாதி போன்ற நுட்பமான இந்திய கலாச்சாரங்களை குறிக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் எதுவும் இல்லை. எனவே வேலை வாய்ப்பு நலன் மற்றும் வீட்டு வசதி குறைபாடு போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் சிஸ்கோ நிறுவனத்தில் வேலைபார்க்கும் இந்துக்கள் உயர் வகுப்பு சார்ந்தவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களால் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. வழக்குப் பதிவு செய்யப் பட்ட நபர்களின் பெயர்களை இதுவரை வெளியாகவில்லை.

ஆனால் சான் ஜோன்ஸ் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஒருவர் சிஸ்கோ நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வேலைப் பார்த்து வருவதாகவும் அவர் தன்மீது தொடர்ந்து பாகுபாடு காட்டப்படுகிறது எனக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் காவல் துறையினரின் பிடியில் சிக்கி இனப்பாகுபாட்டால் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்தியர்கள் சாதிப் பாகுபாட்டுடன் நடந்து கொள்வது குறித்த வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மத்தியில் கடும் பதற்றம் நிலவி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

More News

அம்மா.. உண்மையை தைரியமா சொல்லும்மா: அதிரடி காட்டிய ரேவதியின் மூத்த மகள்

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு பெரும் பரபரப்புடன் நடந்து கொண்டிருக்கிறது என்பதும் இந்த வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு

தலைமை காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மதுரை ஐகோர்ட் உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகள் காப்பாற்றப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக சிபிசிஐடி இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்

பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு வெறித்தனமான ரசிகரா?

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பகுதியில் ஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனை ஜூலி பங்கேற்றிருந்தார் என்பது தெரிந்ததே. ஆரம்பத்தில் சில வாரங்கள் ஜூலிக்கு ரசிகர்கள்

சாத்தான்குளம் வழக்கில் திடீர் திருப்பம்: அப்ரூவராக மாறும் அதிகாரிகள்

சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

என் அப்பா ஒரு குடிகாரர், வனிதா சொல்வதில் உண்மை இல்லை: பீட்டர்பால் மகன்

சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம் நடந்து அதன் பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தனது கணவர் குடிகாரர் என்றும்