ரஜினி என்னை அணுகினால் 70% வெற்றி கிடைக்கும்: சாமியார் ஆரூடம்!

ரஜினி என்ன அணுகி அரசியலில் குதித்தால் அவருக்கு எழுபது சதவீத வெற்றி சாத்தியம் உண்டு என சாமியார் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தியபோது, அவரது ரசிகர்கள் பலர் வெளியில் நின்று அவரது முடிவிற்காக காத்திருந்தனர். அப்போது ரசிகர்களோடு ரசிகராக ஒரு சாமியாரும் நின்றுகொண்டிருந்தார். அவரை தனியார் தொலைக்காட்சி ஒன்று அணுகி பேட்டி எடுத்தபோது ’நான் ரஜினி ரசிகன் அல்ல, ஆனால் அதே நேரத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புபவர்களில் ஒருவர் என்று கூறினார்.

நான் சாமியார் அல்லது மந்திரவாதி அல்ல என்றும் என்னுடைய உடலில் தெய்வமே உள்ளது என்றும் கூறிய அவர், ரஜினிகாந்த்தை பணம் சம்பாதிக்க மட்டும் இந்த பூமியில் கடவுள் விட்டுவைக்கவில்லை என்றும் மக்களைக் காக்கவும் மக்களுக்கு வழிகாட்டவும்தான் இந்த பூமியில் அவரை கடவுள் வைத்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் அரசியலுக்கு வந்து சகாயம் போன்ற அதிகாரிகளை முன்னிறுத்தினால் 51 சதவீதம் வெற்றி நிச்சயம் என்றும் என்னை அணுகினால் அவருக்கு 70 சதவீத வெற்றி சாத்தியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்றால் அவரது வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்றும் அந்த சாமியார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

அடுக்கடுக்கான கேள்விகள்: பாலாஜிக்கு பதிலடி கொடுப்பாரா ஆரி?

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் தொடங்கிய கால் சென்டர் டாஸ்க் இந்த வாரமும் மீண்டும் தொடர்கிறது. இன்றைய முதல் புரமோவில் கால் சென்டர் ஊழியராக ஆரியும், காலராக பாலாஜியும் பேசுகிறார்கள்.

பாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி!

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே அனைத்து போட்டியாளர்களுடன்

இளம் கலைஞர்களை அடையாளம் காணும் சர்வதேச அமைப்பு… தூதராக நமது இசைப்புயல்!!!

பிரிட்டிஷ் அகாடமி ஒன்று வளர்ந்து வரும் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கவும்

பா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் முக்கிய அப்டேட்!

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வருவதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்

ஒரு யானையின் 35 ஆண்டுகால சிறை வாழ்க்கை… பல அமைப்புகளின் கடின முயற்சியால் நடந்த மாற்றம்??

தென் ஆப்பிரிக்காவை தவிர சில தெற்காசிய நாடுகளில் மட்டுமே யானைகள் வாழுகின்றன.