கோட்சே தீவிரவாதியா? கொலைகாரனா? சுப்பிரமணியன் சுவாமி விளக்கம்

  • IndiaGlitz, [Monday,May 13 2019]

உலக நாயகன் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர்தான் நாதுராம் கோட்சே என்றும் பேசியுள்ளார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

கமல்ஹாசன் கூறியதுபோல் கோட்சே ஒரு தீவிரவாதி கிடையாது. மகாத்மா காந்தியை கொலை செய்த ஒரு கொலைகாரன். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. சமுதாயத்தில் உள்ள மக்களை யார் அச்சுறுத்தும் வகையில் செயல்படுகின்றார்களோ அவர் தான் பயங்கரவாதி என ஐநா ஒரு வரைமுறையை வகுத்துள்ளது. இந்த வரைமுறையின்படி கோட்சே ஒரு கொலைகாரன், அவனால் சமுதாயத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதால் அவன் தீவிரவாதி கிடையாது என்று கூறினார்.

மேலும் கமல்ஹாசனை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும், என்ன பேச வேண்டும் என்றே அவருக்கு தெரியவில்லை என்றும் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

More News

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து,

எமி ஜாக்சனை அடுத்து திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான அஜித் பட நடிகை!

விஜய் நடித்த 'தெறி' உள்பட பல திரைப்படங்களில் நடித்த எமிஜாக்சன் சமீபத்தில் திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமானார் என்ற செய்தி வெளிவந்தது தெரிந்ததே.

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' சென்சார் தகவல்கள்

விஜய் ஆண்டனி நடித்த திகில் சஸ்பென்ஸ் திரைப்படமான 'கொலைகாரன்' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில்

தோத்தாலும் நம்ம தல எப்போதுமே தோனி தான்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை இன்னும் நம்ப முடியவில்லை. 18 அல்லது 19 ஓவர்களில் சென்னை அணி வெற்றிக்கனியை பறித்துவிடும்

மணமகள் இல்லாமல் ஒரு திருமணம்: ஒரு தந்தையின் நெகிழ்ச்சி முடிவு!

மன வளர்ச்சி குன்றிய மகனுக்கு அவரது தந்தை மணமகளே இல்லாமல் திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது