close
Choose your channels

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார்: ஒரு சிறுகுறிப்பு

Saturday, April 7, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார்: ஒரு சிறுகுறிப்பு

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வேலூரை சேர்ந்த வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் என்பவர் குறித்து தற்போது பார்ப்போம்

வேலுர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிவலிங்கம் என்பவரின் மகன் தான் சதீஷ்குமார். சதீஷ்குமார் 10ஆம் வகுப்பு படித்த போதே தனியார் உடற்பயிற்சி மையத்தில் பளூதூக்குவதில் ஆர்வம் கொண்டவர். பின்னர் பி.ஏ. படித்த சதீஷ்குமார், தென்னக ரயில்வேயில் பணியில் சேர்ந்தார்

கடந்த 2010ஆம் ஆண்டு பல்கேரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். அதேபோல் 2011ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியிலும் சதீஷ்குமார் கலந்து கொண்டார். 

மேலும் 2012ஆம் ஆண்டு அபியாவில் நடந்த பளூதூக்கும் போட்டியிலும், 2013ஆம் ஆண்டு நடந்த பளூதூக்கும் போட்டியிலும் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அதுமட்டுமின்றி 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பளூதூக்கும் போட்டியில் தங்கம் வென்று தங்கம் வென்ற முதல் தமிழக வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த நிலையில் தான் இன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 77கிலோ பளூதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சதீஷ்குமாரின் சாதனை தொடர நமது வாழ்த்துக்கள்

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.