close
Choose your channels

பூட்டியிருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை… போலீசார் வலைவீச்சு!

Monday, April 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒசூர் பகுதியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் 200 சவரன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி அடுத்த காரிமங்கலத்தை சார்ந்தவர் மாதையன். இவர் கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் வேலைப்பார்த்து வந்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தயாகம் திரும்பிய அவர் ஒசூர் பகுதியில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசிக்கத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு அவர் சென்ற நிலையில் பூட்டி இருந்த அவர் வீட்டின் கதவை யாரோ உடைத்துள்ளனர். இந்தத் தகவலை வேலைக்காரப் பெண் மாதையனுக்கு தெரிவிக்க உடனே விரைந்த அவர் 200 சவரன் தங்கம் மற்றும் ஒரு கிலோ அளவிற்கு வெள்ளிப் பொருட்கள் கொள்ளைப் போனதாக காவல் துறையில் புகார் தெரிவித்து உள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஒசூர் பகுதியில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரச் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூட்டி இருந்த வீட்டில் 200 சவரன் தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் ஒசூர் பகுதியில் கடும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.