கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

 

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி பயன்பாட்டு வரும் என்ற மகிழ்ச்சி செய்தியை இந்திய மருந்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த ஜுன் 30 ஆம் தேதி பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் பூனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் இரண்டும் இணைந்து COVIAXIN என்ற புதிய தடுப்பூசியை தயாரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியது. இந்த தடுப்பூசி ஏற்கனவே விலங்குகளிடம் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகவும் மனிதர்களின் மீதான சோதனைக்கு ICMR ஒப்புதல் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

தற்போது வருகிற 7 ஆம் தேதி COVIAXIN தடுப்பூசி இரு கட்டமாக பிரித்து மனிதர்களின் மீது சோதிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் மருந்து குறித்த ஆராய்ச்சியை மிக விரைந்து நடத்துமாறு ICMR தேசிய வைரலாஜி விஞ்ஞானிகளைக் கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மனிதர்களின் மீதான சோதனை முயற்சியில் வெற்றி கிடைக்கும் பட்சத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட கொரோனா தடுப்பூசி வருகிற சுதந்திரத் தினத்தன்று கிடைக்கும் என ICMR சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தேசிய வைரலாஜி நிறுவனம் தயாரித்துள்ள COVIAXIN இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதாகவும் விஞ்ஞானிகள் தகவல் அளித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து வருகிற 7 ஆம் தேதி இரு கட்டமாக பிரிந்து மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட இருக்கிறது.

மேலும், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் காடில் ஹெல்த்கேர் லிமிட் எனும் நிறுவனம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து இருக்கிறது. இந்த நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி ஏற்கனவே எலி, முயல், கினியா, பிக், மைஸ் போன்ற விலங்குகளிடம் சோதனை செய்து பார்க்கப் பட்டதாகவும் அதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் நல்ல முடிவுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அந்நிறுவனத்திற்கும் மனிதர்கள் மீதான சோதனையை நடத்திக் கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து இந்தியாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசியும் வருகிற 7 ஆம் தேதி மனிதர்கள் மீது சோதனைக்கு உட்படுத்தப் பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெடிமருந்து வைத்து கொல்லப்பட்ட கேரள யானையை போல மேலும் ஒரு துயரச்சம்பவம்!!!

கேரளாவில் கடந்த மாதம் அன்னாசி பழத்தில் வைக்கப் பட்ட வெடிமருந்தால் ஒரு யானை அநியாயமாக உயிரிழந்தது.

நீங்கள்ல்லாம் நல்லா இருப்பிங்களாடா? கவினின் ஆவேச பதிவு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஏழு வயதுச் சிறுமியான ஜெயப்பிரியா, 3 காமக் கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

'விக்ரம் 60' படத்திற்காக புதிய லுக்கில் தயாராகும் துருவ்

சியான் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ள நிலையில் விக்ரமின் அடுத்த படமான 'விக்ரம் 60' படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாகவும்

அவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட  ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்!!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் “என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்” என்ற அதிர்ச்சி தகவலை கிரான் ஃபிளவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

கொரோனா தடுப்பூசி: இந்திய விஞ்ஞானிகள் இரண்டாவது ஹிட்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.