'குட் பேட் அக்லி' ஓடிக்கொண்டிருந்த போது வெற்றி தியேட்டருக்குள் புகுந்த போலீஸ்.. படம் நிறுத்தம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


அஜித் நடித்த ’குட் பேட் அக்லி’ திரைப்படம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் இன்று திரையிடப்பட்டபோது பரபரப்பு சம்பவம் ஒன்று நடந்தது.
’குட் பேட் அக்லி’ திரைப்படம் திரையிடப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், மேல் பகுதியில் இருந்த மிரர் பால்லைட் திடீரென விழுந்தது. அந்த லைட் நேராக ஒரு சிறுமியின் தலையில் விழுந்ததால், குழந்தை வலியால் கத்தி அழுதது. இதனால் அவரது பெற்றோர் திரையரங்க நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் காரணமாக சுமார் 30 நிமிடங்களுக்கு திரைப்படம் நிறுத்தப்பட்டது. பின்னர், தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலதிக சிக்கல்கள் ஏதும் ஏற்படாத நிலையில், பின்னர் திரையிடல் மீண்டும் தொடங்கப்பட்டது.
’குட் பேட் அக்லி’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. ஆனால் இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com