close
Choose your channels

ரூ.75 ஆயிரம் கோடி இந்தியாவில் முதலீடு: பிரதமருடன் உரையாடிய பின் சுந்தர்பிச்சை அறிவிப்பு

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடியுடன் உரையாடிய சில நிமிடங்களில் இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் ரூ.75 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யவுள்ளதாக கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவரும் இன்று உரையாடினர். இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ’கொரோனா தாக்கம் முதல் இந்திய விவசாயிகள், இளைஞர்கள், தொழில்முனைவோர், தொழில்நுட்பம் என்று பல்வேறு விஷயங்கள் குறித்து இன்று காலை நானும், கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சையும் உரையாடினோம்.'' என்று பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது டுவிட்டரில், ‘இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 75,000 கோடி அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்படும்’ என்றார். மேலும் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் தமிழ் உள்பட அனைத்து இந்திய மொழிகளிலும் மக்களுக்கு டிஜிட்டல் வழியாக தகவல் கிடைக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் இணையதள வசதி கிடைக்க வேண்டும் என்றும், இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை ஏற்படுத்துதல், சேவைகளை அறிமுகம் செய்வது, வர்த்தக நிறுவனங்களுக்கு தொழிலில் டிஜிட்டல் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பது, சுகாதாரம், கல்வி, விவசாயம் ஆகியவற்றில் தொழிநுட்பம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்றும் கூறினார்.

மேலும் இன்று நடைபெற்ற கூகுள் பார் இந்தியா'' என்ற கூட்டத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆகியோர்களுக்கு நன்றி என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.