close
Choose your channels

உலக பிரபலம் தமிழருடன் சச்சின் விரும்பி எடுத்த புகைப்படம்

Monday, July 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது இந்தியர்கள் மட்டுமின்றி உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கனவாக உள்ளது. இந்த நிலையில் சச்சின் மிகவும் விரும்பி ஒரு தமிழருடன் புகைப்படம் எடுத்து கொண்டார். அவர்தான் உலக அளவில் பிரபலமான கூகுள் சி.இ.ஒ சுந்தர் பிச்சை.

நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை வர்ணனை செய்து வந்த சச்சின் தெண்டுல்கர், இந்த போட்டியை நேரில் கண்டு ரசிக்க கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை வந்திருக்கின்றார் என்பதை அறிந்து அவரே சுந்தர் பிச்சையை அவர் இருக்கும் இடத்திற்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

இந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த புகைப்படத்திற்கு சுமார் 50 ஆயிரம் லைக்ஸ்கள் குவிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.