close
Choose your channels

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு 

Friday, November 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில மாதங்களுக்கு முன் பொள்ளாச்சியில் இளம்பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மயக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவர்கள் மீதான குண்டர் சட்டம் தற்போது நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் திருநாவுக்கரசு, சபரிராஜன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்த கும்பல் பொள்ளாச்சியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் 200க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக விசாரணையில் தெரிய வந்தது

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்ளிட்டோரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி திருநாவுக்கரசு தாய் பரிமளா, சபரிராஜன் தாய் லதா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களில், பாலியல் வன்கொடுமை வழக்கை உரிய சட்டத்தின் கீழ் தான் விசாரிக்க வேண்டும் என்றும், குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்து பிறப்பித்த உத்தரவை தங்களுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்கள் உறவினர்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனவும், ஆவணங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும் கூறி, இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைத்து கோவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். இதனால் இந்த வழக்கு தற்போது பரபரப்பை எட்டியுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.