close
Choose your channels

அசோக்குமாரிடம் எந்தவித பண வரவு-செலவும் இல்லை: கோபுரம் பிலிம்ஸ் விளக்கம்

Wednesday, November 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் தற்கொலைக்கு பைனான்சியர் அன்புச்செழியனே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் இதுகுறித்து ஒரு விளக்க அறிக்கையை கொடுத்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.

இன்றைய நாளிதழ்கள், தொலைக்காட்சி செய்திகளில் திரு அசோக்குமார் என்பவர் தற்கொலை செய்து கொண்டு அவர் ஒரு கடிதம் எழுதி வைத்ததாகவும், அதில் சில வார்த்தைகள் எழுதி வைத்துள்ளதாகவும் செய்திகளில் வெளிவந்துள்ளது. அசோக்குமார் என்பவர் எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் அவர் எழுதி வைத்ததுதானா? அசோக்குமார் என்பவர் திருச்சி குமார் அவர்களின் உதவியாளர். நாங்கள் அசோக்குமார் என்பவருக்கு எந்த பண வரவு செலவும் செய்யவில்லை. படம் தயாரிப்பதற்கு சசிகுமார் அவர்கள் தான் எங்களிடம் பணம் பெற்றுள்ளார். எங்களிடம் எந்தவித வியாபார தொடர்பும் இல்லாத அசோக்குமார் எங்களை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார் என்பது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது.

எங்களிடம் பண உதவி பெற்று படம் தயாரிக்கிறார்கள். அதை படம் ரிலீஸ் செய்யும்போது செட்டில் செய்வார்கள். இதுதான் சினிமா நடைமுறை. எந்த முதலீடும் இல்லாமல் சிலர் படம் தயாரிப்பதாக வருகிறார்கள். எந்தவித செக்யூரிட்டியும் இல்லாமல் இவர்களை நம்பி பணம் தருகிறோம். இவர்கள் ஒரு படத்திற்கு பலரிடம் பணம் வாங்குகிறார்கள். ஆனால் இவர்கள் படம் தயாரிக்காமல், வீடு, கார் என்று வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து பின்னர் பண உதவி செய்த எங்களையும் சிரமப்படுத்துகிறார்கள். இப்படி சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஒரு கும்பல் மோசடி பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் அலைவதாக தெரிகிறது. நாங்கள் இருபது ஆண்டுகளாக சினிமா தொழில் செய்கிறோம். எங்கும் எங்கள் மேல் எந்த புகாரும் கிடையாது.

மேற்படி அசோக்குமார் என்பவர் எழுதியதாக சொல்லப்படுவதில் எள்ளளவும் உண்மை இல்லை என்பதை இதன் மூலம்தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் விளக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.