முதன்முதலாக இணையும் கவுண்டமணி-சந்தானம்

  • IndiaGlitz, [Tuesday,April 19 2016]

கடந்த 1980கள் மற்றும் 90களில் காமெடி நடிகர் கவுண்டமணி நடிக்காத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வந்தார். அவருடைய எகத்தாளமான வசன உச்சரிப்பும், இன்னோசென்ஸாக கலாய்க்கும் திறமையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.
கவுண்டமணியின் பாணியை கொஞ்சம் காலத்திற்கு தகுந்தாற்போல் மாற்றி தற்போது சந்தானம் நடித்து வந்தாலும் இதுவரை இரண்டுபேரும் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் தற்போது இருவரும் ஒரே மேடையில் இணையும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆம் கவுண்டமணி ஹீரோவாக நடித்துள்ள 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சந்தானம் கலந்து கொள்ளவுள்ளார்.
கோலிவுட் திரையுலகின் இரண்டு பெரிய காமெடி நட்சத்திரங்கள் ஒரே மேடையில் பேசப்போவதை கேட்க ஆவலுடன் இருப்பதாக இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகும் கணபதி தெரிவித்துள்ளார்.

More News

லைகாவின் அடுத்த படத்தில் ஷங்கர்-வடிவேலு

கடந்த 2006ஆம் ஆண்டு ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' திரைப்படம்....

அஜித் பிறந்த நாளில் கனெக்க்ஷன் ஆகும் மகேஷ்பாபு படம்

மகேஷ்பாபு நடித்த ஸ்ரீமுந்துடு-செல்வந்தன் படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகி வந்த 'பிரம்மோத்சவம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.....

'தெறி' சக்ஸஸ் பார்ட்டியில் விஜய்-அட்லி

இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகிய 'தெறி' திரைப்படம் கடந்த தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகி....

கோலிவுட்டில் உருவாகும் இன்னொரு ஆக்சன் ஹீரோயின்

இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அந்த படத்திற்கு இசையமைத்த இளையராஜாவுக்கும் நாயகியாக நடித்த வரலட்சுமிக்கும் நல்ல விமர்சனங்கள் கிடைத்தது....

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு வடிவேலு வராதது ஏன்?

நேற்று நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட பெரும்பாலான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்...