close
Choose your channels

'சிக்ஸர்' படக்குழுவினர்களுக்கு கவுண்டமணி அனுப்பிய வக்கீல் நோட்டீஸ்! நாளை வெளிவருமா?

Thursday, August 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவுண்டமணி நடித்த சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற மாலைக்கண் காமெடி காட்சியின் தொடர்ச்சியாக 'சிக்ஸர் படம் உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் ஹீரோ வைபவ், கவுண்டமணியின் பேரனாக நடித்துள்ளதாக முன்னோட்ட காட்சிகளில் இருந்தும் தெரிய வருகின்றது.

இந்த நிலையில் கவுண்டமணி அவர்களின் அனுமதி பெறாமல் அவருடைய புகைப்படத்தையும் வசனங்களையும் 'சிக்ஸர்' என்ற திரைப்படத்தில் தவறான முறையில் அவதூறாக பயன்படுத்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவுண்டமணி அவர்களின் வழக்கறிஞர் க.சசிகுமார் அவர்கள் படக்குழுவினர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸில் 'சிக்சர் படத்தில் இடம்பெற்ற 'ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டெண்டா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு ஆளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய்! சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திர்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ' போன்ற வசனங்கள் கவுண்டமணியை இழிவு செய்யும் வகையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'சிக்ஸர்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் இந்த படம் வெளிவருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.