அரசுப்பேருந்தில் திடீர் தீ விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 40 பயணிகள்

  • IndiaGlitz, [Wednesday,June 21 2017]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேல்மருவத்தூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரத்தில் இருந்து 40 பயணிகளுடன் சென்னை சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றது. அங்கு பயணிகள் ஏறிக்கொண்டும் இறங்கி கொண்டும் இருந்த நிலையில் திடீரென பேருந்து எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேருந்து ஓட்டுனர் உடனடியாக பயணிகள் அனைவரையும் பத்திரமாக கீழே இறங்கச் சொல்லி அறிவுறுத்தினார். பயணிகள் அனைவரும் இறங்கிய பின்னர் பேருந்தை சற்று தள்ளி நிறுத்துவதற்காக மீண்டும் பேருந்தை ஸ்டார்ட் செய்தார். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் தீப்பிடித்து மளமளவென பேருந்து முழுவதும் பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். ஓட்டுனர் முன்கூட்டியே பயணிகளை இறங்க சொல்லி அறிவுறுத்தியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

More News

நான் பதவி விலக கோஹ்லியே காரணம்! கும்ப்ளே மறைமுக குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில்கும்ப்ளே பதவியேற்றதில் இருந்தே இந்திய அணி வியக்கத்தக்க முன்னேற்றங்களை பெற்று வந்தது. சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டி தவிர இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது என்று கூறலாம்...

திரையுலகில் அறிமுகமாகும் ரஜினி-கமல் நாயகியின் மகன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்களுக்கு கடந்த 80களில் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை அம்பிகா....

விஜய்க்கு அட்வான்ஸ் வாழ்த்து கூறிய தனுஷ்

இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் நாளை தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இன்றில் இருந்தே அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது...

தனுஷின் 'விஐபி 2' பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷ் நடித்த 'விஐபி' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது...

ரஜினி, அஜித், விஜய், தனுஷ் குறித்து 'வனமகன்' நாயகி

ஜெயம் ரவி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வனமகன்' திரைப்படம் வரும் வெள்ளியன்று பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி சாயிஷாசேகல் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்...