close
Choose your channels

டீ குடிக்கும் கேப்பில் காணாமல் போன அரசு பேருந்து? அதிர்ச்சி சம்பவம்!

Thursday, February 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் அரசு பேருந்தை நிறுத்தி விட்டு ஓட்டுநர், டீ குடிக்க சென்றபோது அதை மர்ம நபர் கடத்தி சென்று சில மைல் தூரத்தில் நிறுத்திவிட்டு போன சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை- திருமங்கலம் காவல் நிலையத்திற்கு பின்புறம் அண்ணா நகர் பணிமனை இருக்கிறது. இதில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தை கடந்த செவ்வாய் கிழமை காலை 4.30 மணிக்கு எடுத்துக் கொண்டு அதன் ஓட்டுநர் வாசலுக்கு வந்து இருக்கிறார். பணிமனை வாசலிலேயே பேருந்தை நிறுத்திய அவர் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று இருக்கிறார். அங்கு டீயை குடித்துக் கொண்டு இருக்கும்போதே தன்னுடைய பேருந்தை மர்ம நபர் ஓட்டிச் செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இதனால் பேருந்தின் பின்னாலேயே அந்த ஓட்டுநரும் ஓடி இருக்கிறார்.

ஒருகட்டத்தில் வேகமாக பேருந்தை ஓட்டிச் சென்ற அந்த நபர் பாடி பகுதிக்கு அருகே நிறுத்தி விட்டு காணாமல் போய்விட்டார். இதனால் பின்னால் ஓடிவந்த ஓட்டுநர் வழியில் வந்தவர்களிடம் கேட்டவாறே ஒருவழியாக பேருந்தையும் கண்டுபிடித்து இருக்கிறார். இச்சம்பவம் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு தற்போது சிசிடி காட்சிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளன. ஆனால் சென்னை பகுதியில் பெரும்பாலான சிசிடி கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதால் அந்த மர்மநபரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.