தமிழக ஆளுனரின் சென்னை வருகை திடீர் ரத்தா?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வராக இன்று அல்லது நாளை சசிகலா பொறுப்பேற்கும் வகையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே ஆளுனரின் மும்பை நிகழ்ச்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சென்னை செல்லும் பயண ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளதால் அவருடைய சென்னை வருகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கிளப்பிய அரசியல் புயல் காரணமாகவே ஆளுனரின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆளுனரின் அடுத்தகட்ட நடவடிக்கையை நாடே மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

More News

மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்...

மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது...

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது...