சசிகலா பதவியேற்பு குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் கூறியது என்ன?

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாரானது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

கோவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு கவர்னர் வித்யாசாகர்ராவ் சென்னைக்கு திரும்பியதாகவும், இன்று நடைபெறும் பதவியேற்புவிழாவில் அவர் கலந்து கொள்வார் என்றும் முதலில் கூறப்பட்டது.

ஆனால் திடீரென கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுவிட்டதாக சற்று முன்னர் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா முதல்வர் பொறுப்பேற்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. மேலும் சசிகலாவின் பதவியேற்பை முன்னிட்டு சென்னை பல்கலைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலுடன் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆலோசனை நடத்தியதாகவும், பதவியேற்பில் சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்ற போதிலும், ஒருவாரம் காத்திருப்பதில் தவறில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

More News

வெளியானது சீயான் விக்ரமின் 'சாமி 2' லோகோ

விக்ரம் நடித்த 'இருமுகன்' படத்தின் இசை வெளியீட்டு தினத்தில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரி, விக்ரம் நடிப்பில் 'சாமி 2' திரைப்படம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் 'சாமி 2' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் லோகாவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்...

அனிருத்துக்கு கிடைத்த 'ஆப்பிள்' வாய்ப்பு

உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் இசை நிறுவனம் 'ஆப்பிள் மியூசிக்'. இந்நிறுவனத்தின் இந்தியாவின் விளம்பர அம்பாசிடராக இளம் இசைப்புயல் அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்...

சசிகலா முதல்வர் பதவியேற்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

தமிழக முதல்வராக சசிகலா நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் முதல்வர் பதவியை ஏற்பது தார்மீக அடிப்படையில் முறையானது அல்ல என்று அரசியல் விமர்சகர்கள் உள்பட பலர் பேட்டியளித்தும், சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தும் வருகின்றனர்...

'விஜய் 61' படத்தின் நாயகி திடீர் மாற்றம்?

இந்நிலையில் இந்த படத்தின் நாயகிகளில் ஒருவராக ஜோதிகா திடீரென மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக 'ஓகே கண்மணி' நாயகி நித்யாமேனன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது...

காற்று வெளியிடை: வைரமுத்து வார்த்தைகளால் விளையாடிய 'வான்' பாடல் வரிகள்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'காற்று வெளியிடை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் 'அழகியே' பாடல் சமீபத்தில் வெளிவந்து ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் இன்னொரு பாடலான 'வான்' என்று தொடங்கும் &#