இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு தடை… மத்திய அரசு அதிரடி!!!

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

 

இந்தியாவில் மேலும் 43 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு விரோதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கருத்துகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகவும் கூறி மத்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 69A பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் இந்தச் செலிகளை பயன்படுத்தாத வகையில் தடை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஜுன் 29 ஆம் தேதி இந்திய ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறி 59 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதில் டிக்டாக் போன்ற அதிக பயனாளர்களைக் கொண்ட செயலிகளும் இருந்தன.

அதையடுத்து கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி மேலும் 118 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அதிரடி அறிவிப்பு வெளியிட்டது. இதில் பப்ஜி செயலியும் இருந்ததால் பல இளைஞர்கள் கடும் மன வருத்தம் அடைந்தனர். தற்போது மேலும் 43 சீனச் செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் முதலே இந்திய-சீன எல்லைப் பிரச்சனை கடும் சர்ச்சரவை ஏற்படுத்தி வருகிறது. அதையொட்டி மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில் இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More News

தமிழகத்தில் நாளை பொது விடுமுறை!!!

நிவர் புயல் நாளை கரையை கடக்க இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக 76 ஆண்டுகளுக்கு புதிய நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது.

ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம்

வாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்றுதான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு சுவராஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

பிறந்த குழந்தையைக் விமான நிலையத்தில் வீசிவிட்டு வேறு நாட்டுக்கு பறந்து சென்ற தாய்!!!

கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில  கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையைப் அதன் தாயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு