close
Choose your channels

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில் 

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் திரைக்கு வர தயாராக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜோதிகாவின் நடிப்பு, பார்த்திபனின் நக்கல் கலந்த வசனங்கள், நீதிமன்ற காட்சிகள், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஏற்படும் திருப்பம், இயக்குனர் ஜெஜெ பெடரிக்கின் திரைக்கதை ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு பக்க பலமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இருப்பினும் ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசால் நேரடியாக தடுக்க முடியாது என்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். இதனை அடுத்து திரையரங்குகள் திறக்கப்படும் வரை சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளிவர எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் திரையரங்குகள் திறப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.