பெங்களூரில் படிப்படியாக வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்....!

  • IndiaGlitz, [Tuesday,April 06 2021]

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தொற்று 2-வது அலையாக உருவெடுத்து பரவி வருவதால் பெங்களூரில் சில கட்டுப்பாடுகள் வந்துள்ளது.

கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் அதிகரித்து வரும் சூழலில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் வந்துள்ளது. அந்த வகையில் கர்நாடகா, பெங்களூரில் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகின்றது. கர்நாடக மாநில அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

பெங்களூர் நகரத்தில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்களில் 50% மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முகக்கவசங்கள், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுவது அவசியமான ஒன்றாகும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா தொற்று காலம் முடியும் வரை சீல் வைக்கப்படும்.

• 50% உடற்பயிற்சி கூடங்கள் மற்றுமே இயங்க வேண்டும்.

• கர்நாடக மாநிலம் முழுவதும் நீச்சல் குளங்களை பொதுமக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளுக்கு தயாராகி வரும் நீச்சல் வீரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மூத்த நீச்சல் பயிற்சியாளர் ஷ்ரீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

• அப்பார்ட்மெண்ட்-களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், புத்துணர்ச்சி மையங்கள் ஆகியவற்றை கட்டாயமாக மூடியிருக்க வேண்டும்.

• வருகின்ற 7-ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

• 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, 10 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கலாம், ஆனால் வருகைப்பதிவு என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய விடுதிகள் மூடப்படும். ஆனால் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்ட படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஓட்டு போட்ட 'குக் வித் கோமாளி' பிரபலங்கள்! வைரல் புகைப்படங்கள்!

விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு என்பதும் தெரிந்ததே. வரும் சனி ஞாயிறு

குடும்பத்துடன் வந்து வாக்களித்த எடப்பாடியார்...!

வாக்களிக்கும் இடம் வரை தனது பேரனை அழைத்து சென்று, எடப்பாடி பழனிச்சாமி வாக்களித்தார். 

கொரோனவால் பாதிக்கப்பட்ட லோகேஷ் கனகராஜ் எப்படி இருக்கிறார்? அவரே பதிவு செய்த டுவிட்!

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம் 

சைக்கிளில் வந்ததன் காரணம் என்ன? விஜய் தரப்பு விளக்கம்!

தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் வாக்களித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நடந்து சென்ற விக்ரம் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு: என்ன பிரச்சனை?

தமிழகத்தில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்