close
Choose your channels

படுக்கை வசதியில்லாமல் பலியான மூதாட்டி...! கலவரத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...!

Tuesday, April 27, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் படுக்கை வசதி இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினர், மருத்துவமனையிலே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான, அப்பல்லோவிற்கு உடல்நிலை குறைபாடு காரணமாக 62 வயதுடைய மூதாட்டியை அழைத்து வந்தனர் அவரது உறவினர்கள். ஆனால் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக படுக்கைகள் நிரம்பியுள்ளன. படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால், மூதாட்டியை மருத்துவமனை நிர்வாகம் காக்க வைத்துள்ளது. ஆனால் சிறிது நேரத்திலே மூதாட்டி உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனைக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.