close
Choose your channels

திருமணமான சிலமணி நேரங்களில் மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள்: அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 16, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணமான சில மணி நேரங்களில் மணமகனை அவருடைய நண்பர்களே கத்தியால் குத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாலிம்பூர் என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு 28 வயதான பப்லு என்பவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணம் மிகவும் சிறப்பாக நடந்ததை அடுத்து திருமணத்திற்கு பின்னர் ஒரு சில மணி நேரங்களில் பப்லு தனது நண்பர்களை சந்திக்க சென்றார்

நண்பர்கள் அவரிடம் திருமணத்தின் காரணமாக மது விருந்து கேட்டதாகவும் அதற்கு அவரும் மது வாங்கிக் கொடுத்ததாகவும் தெரிகிறது. ஆனால் அவர் வாங்கி கொடுத்த மது போதாது என்றும் கூடுதலாக மது வாங்கி தரவேண்டும் என்று நண்பர்கள் கோரிக்கை வைக்க அதற்கு மணமகன் பப்லு மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவருடைய நண்பர்களில் ஒருவர் அவரை கத்தியால் குத்தினார். இதனையடுத்து படுகாயம் அடைந்த பப்லு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மணமகன் பப்லுவை கத்தியால் குத்திய ராம்கிலாடி என்பவரை கைது செய்தனர். மேலும் அவருடைய நண்பர்கள் ஐந்து பேர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருமணமான ஒரு சில மணி நேரத்தில் மணமகன் அவருடைய நண்பர்களால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.