தந்தை பெயரை மகனுக்கு வைத்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Tuesday,August 03 2021]

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைக்கு தனது தந்தையின் பெயரையே வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது, இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ’18 வருடம் கழித்து என் அப்பா என் விரலை பிடித்து இருக்கிறார் மகனாக’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார். அவர் தனது தந்தையே மகனாக பிறந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது குழந்தைக்கு குகன் தாஸ் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் தந்தை பெயர் தாஸ் என்பதை அடுத்து அவர் தனது தந்தையின் பெயரையே மகனுக்கு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்த ’டாக்டர்’ திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் அவர் தற்போது ’அயலான்’ மற்றும் ’டான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

ராஜராஜ சோழன் குறித்து பா ரஞ்சித் பேசிய வழக்கு: மதுரை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

'காதல்' இயக்குனர் பாலாஜி சக்திவேலுக்கு விஜய்சேதுபதி செய்த உதவி!

பரத், சந்தியா நடித்த 'காதல்' தமன்னா நடித்த 'கல்லூரி' மற்றும் 'வழக்கு எண் 18/9' உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பாலாஜி சக்திவேல்

தமிழ் உள்பட 3 மொழிகளில் தயாராகும் சூப்பர்ஹிட் மலையாள திரைப்படம்: தமிழில் இயக்குனர் இவரா?

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு விட்டது என்பது தெரிந்ததே

மீண்டும் தயாராகும் வாழ்க்கை வரலாறு திரைப்படம்: ஷகிலா கேரக்டரில் ரஜினி நாயகியா?

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷகிலா என்பதும் அவற்றில் பெரும்பாலானவை கவர்ச்சி படங்கள் என்பதும்

போலி மீடியாக்கள், போலியான செய்திகள்: யாஷிகாவின் பதிவால் பரபரப்பு!

தனக்கு நிகழ்ந்த கார் விபத்து குறித்து ஒரு சில போலி மீடியாக்கள் போலி தகவல்களை பகிர்ந்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை யாஷிகா பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது