close
Choose your channels

சொகுசு விடுதியில் கைதுசெய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ… பரபரப்பு பின்னணி!

Saturday, July 3, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குஜராத் மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ கேசரிசின் சிங் சோலங்கி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் அந்த சொகுசு விடுதியில் இருந்த 25 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 7 பேர் பெண்கள் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

குஜராத் மாநிலம் கெடா மாவட்டத்தில் உள்ள மாடர் எனும் சட்டசபை தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ கேசரிசின் சிங் சோலங்கி கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு சொகுசு விடுதியில் இருந்தபோது கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் அந்த விடுதியில் தடைசெய்யப்பட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் மேலும் அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து மது விருந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

பஞ்ச்மஹால் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சொகுசு பங்களாவில் மது விருந்து மற்றும் சூதாட்டம் நடப்பதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 6 லட்சம் பணம் மற்றும் 8 கோடி மதிப்புள்ள 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.