17 வயதில் கர்ப்பம் அடைவது இயல்புதான்… குஜராத் நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பு!

  • IndiaGlitz, [Friday,June 09 2023]

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி ஒருவர் கர்ப்பம் அடைந்த நிலையில் அதைக் கலைப்பதற்கு ஒப்புதல் கோரி அவரது பெற்றோர் தாக்கல் செய்த வழக்கு ஒன்றில் குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார். அந்தச் சிறுமியின் கர்ப்பம் குறித்த தகவல் சமீபத்தில் அவரது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் சிறுமி மைனர் என்பதால் கர்ப்பத்தை கலைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அவரது பெற்றோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் சிறுமியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிக்கந்தர் சையத், சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும் மேலும் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதால் இந்த வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி சமீர்ஜே டேவ் ‘கடந்த காலங்களில் பெண்கள் 14-15 வயதிற்குள் திருமணம் செய்துகொள்வதும் 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது. 4-5 மாத வித்தியாசங்களை கணக்கில் எடுத்துக் கொள்ள தேவையில்லை. எதற்கும் ஒருமுறை மனுஸ்மிருதியை படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் சிறுமியின் உடல்நிலை மற்றும் கரு பற்றிய மருத்துவ அறிக்கையை வைத்தே வழக்கை விசாரிக்க முடியும் என்று கூறிய நீதிபதி ராஜ்கோட்டில் உள்ள சிவில் மருத்துவமனை மருத்துவக் குழு பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கரு மற்றும் தாய் இருவரும் நல்ல நிலையில் இருந்தால் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதி சமீர்ஜே டேவ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியச் சட்டப்படி ஒரு பெண் கர்ப்பம் தரித்த 24 வாரங்களுக்குள் அவரது உயிர் மற்றும் மன ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏதேனும் இருந்தால் கருவை கலைக்க அனுமதி தரப்படும். ஆனால் குஜராத் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருக்கும் நிலையில் கருக்கலைப்பில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சமும் உள்ளது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்தை கலைப்பது குறித்த விசாரணையில் நீதிபதி சமீர்ஜே டேவ் 17 வயதில் கர்ப்பம் அடைவது எல்லாம் இயல்பானதுதான் என்றும் மனுஸ்மிருதியை படித்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் சுட்டிக்காட்டியிருப்பதும் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் பரப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த வழக்கில் அடுத்தக் கட்ட விசாரணை ஜுன் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'லியோ' படத்தில் இணைந்த கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்.. வேற லெவலில் எதிர்பார்ப்பு..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இந்த படத்திற்கு

'வடசென்னை' அடுத்த பாகத்தை தயாராக வைத்திருக்கும் வெற்றிமாறன்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்..

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான 'வடசென்னை' என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் அடுத்த பாகத்தை வெற்றிமாறன் இயக்கி தயாராக வைத்திருப்பதாக

முதல் திருமண நாள்.. நயன்தாரா குறித்து விக்னேஷ் சிவனின் எமோஷனல் பதிவு..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று அவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிமாறனின் துணை இயக்குனர் விபத்தில் மரணம்.. நடிகரின் கார் மோதியதா?

நடிகரின் கார் மோதிய விபத்தில் வெற்றிமாறனின் துணை இயக்குனர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல்வாதி மகனுடன் திருமணம் உண்மையா? மேகா ஆகாஷ் அம்மா விளக்கம்..!

தமிழக அரசியல்வாதியின் மகனை நடிகை மேகா ஆகாஷ் திருமணம் செய்ய போவதாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலும் இன்று காலை முதல் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. மேலும் சமூக வலைதளங்களில் அந்த