close
Choose your channels

தமிழ் நடிகை புகாரளித்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!

Friday, June 25, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் மீதும் தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் மீதும் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை அவதூறாக பேசியதாக மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் தற்போது மொத்தம் அவர் மீது 3 வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி நடிகை ரோகிணியும் கிஷோர் கே ஸ்வாமி மீது புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தலைவர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வந்த கிஷோர் கே ஸ்வாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு இருப்பதால் அவர் மீது தற்போது குண்டாஸ் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஒரு குற்றத்தை ஒருவர் மீண்டும் மீண்டும் செய்தால் அவர் மீது குண்டாஸ் பாயும் என்பதும், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஒரு வருடம் ஜாமீன் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.