தமிழ் நடிகை புகாரளித்தவர் மீது பாய்ந்தது குண்டாஸ் சட்டம்!

  • IndiaGlitz, [Friday,June 25 2021]

பிரபல அரசியல் விமர்சகர் கிஷோர் கே ஸ்வாமி மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது குண்டாஸ் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோர் மீதும் தற்போதைய முதல்வரான முக ஸ்டாலின் மீதும் அவதூறாக கருத்து தெரிவித்ததாக கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை அவதூறாக பேசியதாக மீண்டும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பத்திரிக்கையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதால் தற்போது மொத்தம் அவர் மீது 3 வழக்குகள் உள்ளன. அதுமட்டுமின்றி நடிகை ரோகிணியும் கிஷோர் கே ஸ்வாமி மீது புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தலைவர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வந்த கிஷோர் கே ஸ்வாமி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு இருப்பதால் அவர் மீது தற்போது குண்டாஸ் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியது. ஒரு குற்றத்தை ஒருவர் மீண்டும் மீண்டும் செய்தால் அவர் மீது குண்டாஸ் பாயும் என்பதும், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டால் ஒரு வருடம் ஜாமீன் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் ஷங்கர் மகளை திருமணம் செய்யப்போவது கிரிக்கெட் நட்சத்திரமா? வைரல் புகைப்படம்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் ஜூன் 27ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெற இருப்பதாக ஏற்கனவே வெளிவந்த தகவலை பார்த்தோம். ஷங்கர் மகளை திருமணம் செய்யப் போகிறவர்

விஜய்யின் 'பீஸ்ட்' போஸ்டருக்கு ஷாருக்கானின் கூலான பதில்!

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்

கார்த்தி ஜோடியாக நடிக்கின்றாரா சிம்ரன்?

கார்த்தி நடித்த 'சுல்தான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்

நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்கின்றாரா பிரபல ஹீரோ?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கும் திரைப்படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சீட்டுக்கட்டுப் போல சரிந்த 12 மாடி கட்டிடம்… நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரைக்கு அருகே நேற்று நள்ளிரவில் 12 மாடி குடியிருப்பு