close
Choose your channels

3 ஆண்டுகளுக்கு ஆசிரியரை தத்தெடுத்த பிரபல நடிகர்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சமூக பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பதிவு செய்வது மட்டுமின்றி சமூக பணிகளுக்காக அவர் குறிப்பிட்ட தொகையையும் செலவு செய்வதுண்டு. குறிப்பாக தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து பெற நிதியளித்த முதல் திரையுலக பிரபலம் இவர்தான்

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை மூன்று ஆண்டுகளுக்கு இவர் தத்தெடுத்துள்ளார். இதனால் அந்த ஆசிரியரின் சம்பளம் உள்பட அனைத்து அத்தியாவசிய செலவுகளை அவர் ஏற்று கொள்கிறார்.

தன்னை போன்று இன்னும் பலர் முன்வந்து ஆசிரியரின் தேவையை பூர்த்தி செய்தால் மாணவர்களுக்கு ஆசிரியர் இல்லாத பிரச்சனையே இருக்காது என்பதே இவரது வேண்டுகோளாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.