நாம எவ்வளவு முக்கியம்ன்னு காட்டனும்டா: ஜிவி பிரகாஷின் 'செல்பி' டிரைலர்

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌதம் மேனன் நடிப்பில் உருவான ‘செல்பி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இந்த டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் கல்லூரி மாணவராக ஜிவி பிரகாஷ், அந்த கல்லூரியை ஆட்டிப்படைக்கும் வில்லன் கேரக்டரில் கவுதம் மேனனும் நடித்திருக்கும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் கௌதம் மேனனுக்கும் ஜிவி பிரகாஷ் இடையே நடக்கும் பிரச்சனை தான் இந்த படத்தின் கதை என்பது டிரைலரில் இருந்து தெரியவருகிறது.

மேலும் திரைப்படத்தில் வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை உள்பட பலர் நடித்துள்ளனர். மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவில் இளையராஜா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரைலரில் உள்ள அதிரடி வசனங்கள் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும், முக்கியமாக ’வாழ்க்கையில் யாராவது நம்மை வேண்டாம் என்று துரத்தி விட்டால், நாம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம காட்டனும்டா’ என்ற ஜிவி பிரகாஷின் வசனமும், ’நீட் தேர்வை எல்லாம் தடுக்க முடியாது, ஆனால் அதை வைத்து எப்படி காசு பண்ண வேண்டும் என்று தான் நாம் யோசிக்க வேண்டும்’ என்ற கவுதம்மேனன் வசனமும் இந்த படத்தின் தற்கால அரசியல் மற்றும் சமூக நிலையை எடுத்துக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ‘செல்பி’ திரைப்படம் ஜிவி பிரகாஷூக்கு மற்றொரு வெற்றிப்படமாக இருக்கும் என்பது டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.


 

More News

சீயான் விக்ரமுடன் இணைந்த பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சியான் விக்ரமின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் தயாரிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான் பார்த்த முதல் முகம் நீ… ஸ்ரீதேவி மகள் செய்த நெகிழ்ச்சி காரியம்!

போனிகபூர் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் “வலிமை“ திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

ஆந்திர வெள்ளம்… நிவாரணத் தொகை அறிவித்த சினிமா பிரபலங்கள்!

சமீபத்தில் வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் ஆந்திராவில் கனமழை

நான் அவளை கேள்வி கேட்பேன்: சிபியிடம் ஆவேசமாக பேசும் பிரியங்கா!

நான் தாமரையை கேள்வி கேட்பேன் என சிபியிடம் பிரியங்கா ஆவேசமாக பேசும் காட்சிகள் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் உள்ளன.

வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக தாமரை மற்றும் பிரியங்கா இடையே வாக்கு வாதங்கள் பெருகிவரும் நிலையில் ஒரு கட்டத்தில் உடைந்து அழும் தாமரை வருண் தோளில் சாய்ந்து கண்ணீர் விடும்