நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் படம் தயாரிக்கும் ஜிவி பிரகாஷ்.. இதுதான் டைட்டில்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கடந்த 2013 ஆம் ஆண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான ’மதயானை கூட்டம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார். 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 15 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில் ஜீவி பிரகாஷ் கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிக்காத நிலையில் தற்போது ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். அதுதான் ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ’கிங்ஸ்டன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த ’காதலிக்க யாரும் இல்லை’ என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்க இருக்கும் நிலையில் நாயகி, வில்லன் உட்பட மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்று வருவதாகவும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments