close
Choose your channels

அஜித்-சுதா கொங்காரா படம் குறித்து ஜிவி பிரகாஷின் அப்டேட்!

Monday, September 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தளபதி விஜய், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து விஜய்க்கு கூறிய கதையை சுதா கொங்காரா அஜித்திடம் கூறியதாகவும் இந்த படம் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரடியாக உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்-சுதா கொங்காரா படம் குறித்த கேள்வி எழுப்பிய போது அவர் கூறியதாவது: சுதா கொங்காரா எழுதிய செம்மையான திரைக்கதை. அஜித்துக்கு மிகப்பொருத்தமாக இருக்கும். இந்த படம் உருவானால் அது இந்திய சினிமாவில் மீண்டும் சூப்பர் படமாக இருக்கும்

சூரரைப்போற்று படத்தில் சுதா அவர்கள் எப்படி நமது உச்சகட்டத்தை அடைந்தாரோ, அதற்கு இணையான ஒரு திரைக்கதையை அவர் எழுதியுள்ளார். இது ஒரு மிகப்பெரிய ஆக்சன் திரைப்படமாக இருக்கும். இந்த படம் உருவானால் இந்திய திரையுலகமே ஆச்சரியம் அடையும்’ என்றும் கூறினார்.

மேலும் அஜித் குறித்து அவர் கூறியபோது ’தான் வெயில் என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதற்கு அடுத்த படமான ’கிரீடம்’ படத்திற்கு இசையமைக்க அவர் வாய்ப்பு கொடுத்ததாகவும், ஒரு பெரிய நடிகர் ஒரே ஒரு படத்திற்கு இசையமைத்த ஒருவருக்கு வாய்ப்பு தருவது பெரிய விஷயம் என்றும் கூறினார். மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற ’அக்கம் பக்கம்’ மற்றும் கனவெல்லாம் பலிக்குதே’ ஆகிய பாடல்கள் இன்றுவரை ஹிட்டான பாடல்கள் என்பது எனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது என்றும், மேலும் அஜித் ஒரு உயர்ந்த மனிதர்’ என்றும் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.