இதுவரை நான் இதை செய்ததே இல்லை.. 'தங்கலான்' பாடல் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

  • IndiaGlitz, [Friday,January 27 2023]

இதுவரை இல்லாத அளவில் சர்வதேச தரத்தில் ‘தங்கலான்’ படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

‘தங்கலான்’ ஆடியோ குறித்து மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இரண்டு பாடல்களை ஒலிப்பதிவு செய்து முடித்து விட்டேன். இதுவரை நான் முயற்சி செய்யாத தனித்துவமான ஒரு சர்வதேச தரத்தில் பாடல்களை உருவாக்கி உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் இதுவரை இல்லாத அளவில் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், பார்வதிமேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றன.

More News

காரும் வரல்ல.. பைக்கும் வரல்ல.. எல்லாமே பொய்.. கே.எல்.ராகுல் குடும்பத்தினர் விளக்கம்!

பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் கே. ராகுல் திருமணம் சமீபத்தில் நடந்த போது இந்த திருமணத்திற்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவிற்கு பரிசு பொருள் வந்ததாக கூறப்பட்ட நிலையில் அவை அனைத்தும்

நடிகை குஷ்புவுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைரலாகும் புகைப்படங்கள்

 நடிகை குஷ்பு தனக்கு ஒரு விபத்தின் காரணமாக காயம் ஏற்பட்டதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

'ஏகே 62' படப்பிடிப்பே தொடங்கவில்லை.. திடீரென டிரெண்ட் ஆகும் 'ஏகே 63'

அஜித் நடித்த 61வது திரைப்படமான 'துணிவு' படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக

அஜித்துக்கு குரல் கொடுத்த பிரபலம் திடீர் மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

அஜித்துக்கு டப்பிங் குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாச மூர்த்தி அவர்கள் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பார்த்திபன் அதையும் செய்துவிட்டார், அதனால் அதுக்கும் மேல... 'ஓநாய்கள் ஜாக்கிரதை' இயக்குனரின் புது முயற்சி!

ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் 'ஒத்த செருப்பு' படம் மூலம் பார்த்திபன் அதை செய்து விட்டதால் ஒரு நடிகர் கூட இல்லாமல் படம் எடுக்கும் முயற்சியில் இருப்பதாகவும்