உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்: பிரபல தமிழ் ஹீரோ

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உள்நாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் தமிழ் திரையுலகை சேர்ந்த மாஸ் நடிகர்கள் யாரும் இதுவரை விவசாயிகள் போராட்டம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்காத நிலையில் பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் சற்றுமுன்னர் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:

மக்களுக்கு போராடுவதற்கான உரிமை உள்ளது; மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை; விவசாயிகளிடம் வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொள்ள சொல்வது தற்கொலைக்கு சமம்; அவர்கள் உரிமைக்களுக்காக போராடுவதும் ஜனநாயகம்தான்! அவர்கள் “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்... என்று பதிவு செய்துள்ளார்.

More News

வெளிநாட்டு பிரபலங்களுக்கு ஆதரவாக கருத்து கூறிய ரஜினி பட நாயகி!

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இந்த போராட்டம் குறித்து வெளிநாட்டு பிரபலங்கள் குரல் கொடுத்ததால் பெரும் பரபரப்பு . 

மாப்பிள்ளை யார்? திருமணம் குறித்து மனம் திறந்த விஜே ஜாக்லின்!

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை ரக்சனுடன் இணைந்து தொகுத்து வழங்கிய ஜாக்லின் தற்போது 'தேன்மொழி' என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்

பிக்பாஸ் சுரேஷ் வீட்டிற்கு சென்ற போட்டியாளர்கள்: மிஸ் ஆனவர்கள் யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியில் ஆரி வெற்றியாளராகவும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர் என்பது தெரிந்ததே.

விஜே ரக்சனின் வேற லெவல் போட்டோஷூட்: வீடியோ

'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரக்சன் தற்போது 'குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும்

கால்பந்து அசுரன் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து வெளி உலகிற்கு தெரியாத சில தகவல்கள்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்களுக்கு மின்னல்வேக கோல்களும் அசுரத்தனமான உக்திகளும்தான் நினைவிற்கு வரும்.